
கெங்கவல்லி குடிநீர் வழங்ககோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
சேலம் மாவட்டம் சதாசிவபுரம் கிராமத்தில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையான வேலை கிடைக்காதது, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற அலுவலக நுழைவாயில் பகுதியில் பதாகைகளுடனும் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

































