சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி, விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுப்பிரமணியை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், அவர் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.