மகுடஞ்சாவடியை அடுத்த அழகனூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சண்முகப்பிரியா (22), காதலித்த கௌதம் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் இருவரும் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால் மனமுடைந்து திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது இறப்புக்கு கௌதம்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.