சேலம் சரகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நடவடிக்கையாக, கடந்த அக்டோபர் மாதம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், விதிகளை மீறி இயக்கப்பட்ட 1,358 வாகனங்களுக்கு ரூ. 72¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச் சென்ற மற்றும் விதிகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.