தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) முதல் 5-ந் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய நிலையங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படும். மேலும், ஐப்பசி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சேலம், தர்மபுரி, ஓசூர் நிலையங்களில் இருந்து இன்று மாலை 4 மணி முதல் நாளை மதியம் 2 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.