சேலம் அருகே பெரிய புத்தூர் சந்தனக்காரன் காட்டைச் சேர்ந்த சங்கீதா (31) உடல்நலக்குறைவால் மனமுடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் வேலூர் மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.