சேலம்: தாயாரிடம் நகை பறித்த மகன், மருமகள் மீது வழக்கு பதிவு

1286பார்த்தது
சேலம்: தாயாரிடம் நகை பறித்த மகன், மருமகள் மீது வழக்கு பதிவு
சேலம் அஸ்தம்பட்டி ராம்நகரைச் சேர்ந்த மாலா (66) என்பவரிடம், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த அவரது மகன் ராகவ் கிருஷ்ணா (36) மற்றும் அவரது மனைவி அமிர்தா (36) ஆகியோர், தாயிடம் ரூ. 6 லட்சம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால், மாலா அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலி மற்றும் 5 பவுன் என மொத்தம் 12 பவுன் நகைகளை கணவன்-மனைவி இருவரும் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாலா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி