அரசு செவித்திறன் குறைவு உடையோர் பள்ளி ஆசிரியர் சஸ்பென்ட்

0பார்த்தது
அரசு செவித்திறன் குறைவு உடையோர் பள்ளி ஆசிரியர் சஸ்பென்ட்
ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு செவித்திறன் குறைவு உடையோர் உயர்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மேரி புஷ்பம், மாணவ-மாணவிகளை அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சாந்தி அளித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு ஒரு மாணவனை அடித்ததில் கன்னம் வீங்கியிருந்த நிலையில், அவர் மேரி புஷ்பம் அடித்ததாக சைகை மூலம் தெரிவித்தார். இதன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் ஆணையர் உத்தரவின் பேரில் மேரி புஷ்பம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி