சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் வார்டு எண் 51-க்கு உட்பட்ட சீரங்கன் தெருவில், திருமணிமுத்தாற்றின் குறுக்கே ரூபாய் 2.67 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் இளங்கோவன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். இந்தப் புதிய பாலம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.