பால்பண்ணை பகுதியில் சாலை, கால்வாய் அமைத்து தர எம்எல்ஏ உறுதி

58பார்த்தது
பால்பண்ணை பகுதியில் சாலை, கால்வாய் அமைத்து தர எம்எல்ஏ உறுதி
சேலம் மேற்கு சட்டசபை தொகுதி தளவாய்பட்டி பகுதியில் ஆவின் பால்பண்ணை அமைந்துள்ளது. இந்த வழியாக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் அங்கு ரவுண்டானா அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அருள் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை வைத்தனர். 

தொடர்ந்து ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சத்யா நகர், எம்.வி.எஸ். நகர் பகுதியில் சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லவில்லை என பொதுமக்கள், அருள் எம்.எல்.ஏ. விடம் தெரிவித்தனர். அவர் நேற்று காலை அங்கு சென்று ஆய்வு செய்து கழிவுநீர் வெளியேறவும், சேதமடைந்த சாலையை அமைத்து கொடுக்கவும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளரை நேரில் அழைத்து பணிகளை செய்து கொடுக்க கேட்டுக்கொண்டார். இதேபோன்று திருப்பதி நகர், சத்யா நகர் பகுதியில் சீரான குடிநீர் கிடைக்கவும் அருள் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார்.