கார்த்திகை மாத தீபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலம் கோட்டம் 500 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக, சென்னை, வேலூர், திருத்தணி, காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.