சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில்பட்டியில் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மோட்டார்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.