சேலம் கே.கே. நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (57) நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சேலத்திற்கு வந்துள்ளார். நேற்று அதிகாலை ரயில் நிலையத்திலிருந்து இறங்கும்போது, தனது கைப்பையை இருக்கையிலேயே மறந்துவிட்டார். அதில் 10 பவுன் நகை, ரூ. 3 ஆயிரம் மற்றும் செல்போன் இருந்தன. உடனடியாக சேலம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். தகவலின் பேரில், ரயில்வே போலீசார் விரைந்து செயல்பட்டு, கைப்பையை மீட்டு தர்மபுரியில் ஒப்படைத்து, பின்னர் தமிழ்ச்செல்வியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.