சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் முறையை தனியார் மயமாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தண்ணீர் குடங்களுக்கு பாடை கட்டி ஊர்வலமாக சேலம் மாநகராட்சி அலுவலகம் வந்து, மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.