தாரமங்கலம் அருகே தெசவிளக்கு பாப்பாத்திகாடு பகுதியைச் சேர்ந்த ஆராயி (71) என்பவர் கே. ஆர். தோப்பூர்-இளம்பிள்ளை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மினி லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.