தமிழ்நாடு அரசின் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினார். மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தேவைகளுக்காக இந்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.