சேலம் எளம்பிள்ளை காந்திநகரைச் சேர்ந்த கிருத்திகா (21) என்பவர், கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு வருடங்களே ஆவதால், உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மகுடஞ்சாவடி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.