தாரமங்கலம் அருகே அழகு சமுத்திரம் பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று மாணவர்களிடம் போதை மாத்திரைகள் விற்ற ஸ்ரீகாந்த் (24) என்பவரை கைது செய்தனர். அவர் சர்க்கார் கொல்லப்பட்டி வட்ட முத்தம்பட்டியைச் சேர்ந்தவர்.