
சேலம் அருகே முருகன், வள்ளி தெய்வானை கோவில் கும்பாபிஷேகம்
சேலம் பெருமாம்பட்டி வலியன்காடு வெற்றிவேல்நகர் வெற்றிவேல் முருகன், வள்ளி தெய்வானை கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு கருவறை விமான கலசம், ராஜகோபுரம் திருக்குட நன்னீராட்டு மற்றும் காலை 7.30 மணிக்கு மூலமூர்த்தி வள்ளி தெய்வானை வெற்றிவேல் முருகனுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. ஆரூரான் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், பேரொளி வழிபாடு, திருக்கல்யாணம் மற்றும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


























