இடங்கணசாலை நகர தி.மு.க. செயற்குழு கூட்டம் நகர செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், துணைத் தலைவர் தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியை வீடு வீடாகச் சென்று அதிகாரிகளுடன் இணைந்து சரிபார்க்க வேண்டும் என்றும், இந்தப் பணியைக் கண்டித்து நாளை (செவ்வாய்க்கிழமை) சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.