சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, 16 வயது சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்து தொல்லை கொடுத்த இளைஞனை, சிறுமியின் பெற்றோர் தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன், பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தான். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், இளைஞன் மற்றும் அவனது சித்தப்பா ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.