ஏற்காடு செங்கலத்துப்பாடி பகுதியை சேர்ந்த விவசாயி அழகேசன் (45), தனது மகன் லிங்கமணியை (12) அபிநவம் ஏகலைவா மலைவாழ் மக்கள் உண்டு உறைவிட பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்க்க நேற்று டூவீலரில் சென்றார். மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி செல்லியம்மன் நகர் அருகே சென்றபோது, டூவீலர் மீது கார் மோதியதில் அழகேசன் உயிரிழந்தார். மகன் லிங்கமணி பலத்த காயமடைந்தார்.