ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்களை மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மூன்று துறைகளின் செயலாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிலளிக்காவிட்டால் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி, வழக்கு விசாரணை டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.