சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது

13பார்த்தது
சென்னை தலைமை செயலகம் முன்பு, தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். பணிநிரந்தரம் கோரியும், தனியார்மயத்தைக் கண்டித்தும் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஏற்கனவே காமராஜர் சாலையில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி