இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு பல்வேறு
அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. உலமாக்களின் மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அ
மைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மையின மாணவர்கள் 90,733 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.