தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை (ஜூன் 4) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. புதிய கல்வியாண்டை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க பள்ளிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.