நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றக் கூடாது என எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விளக்கமளித்துள்ளார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், காணொலி வாயிலாக காவல் ஆணையர் ஆஜராகினார். அப்போது, கூட்டம் அதிகமாகி பிரச்சனை ஏற்பட்டதாகவும், பேரிகார்ட் அமைத்தது ஆகியவை குறித்தும் விளக்கமளித்தார்.