அனுபவமிக்க பல முன்னாள் அமைச்சர்கள் தவெக-வில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் சமீபத்தில் பேட்டி ஒன்றி கூறியிருந்தார். இந்நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளித்த வெல்லமண்டி, வரும் டிச.15-ஆம் தேதி ஓ.பி.எஸ். முக்கிய முடிவை எடுக்கவிருப்பதால், அதுவரை பொறுத்திருக்குமாறு செங்கோட்டையனிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.