அடக்கம் செய்த நபர் உயிருடன் வந்ததால் பேரதிர்ச்சி

25பார்த்தது
அடக்கம் செய்த நபர் உயிருடன் வந்ததால் பேரதிர்ச்சி
சத்தீஸ்கர் மாநிலம் சந்தர்பூர் கிராமத்தில் காணாமல் போன புருஷோத்தம் (25) என்ற இளைஞர் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் திடீரென உயிருடன் வந்ததால் பெற்றோர், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேறொருவரின் உடலை தங்கள் மகன் என நினைத்து அடக்கம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. உறவினர் வீட்டுக்குச் சென்ற புருஷோத்தம் மீண்டும் வீடு திரும்பியதால் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி