அடுத்த ஆண்டு முதல் வருமான வரி அதிகாரிகள், தனிநபரின் இ-மெயில், சமூக வலைதள கணக்குகளை அவர்களின் அனுமதியின்றி அணுகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வருமானம் அல்லது சொத்துக்கள் பற்றிய முழுத் தகவலையும் வெளியிடவில்லை என அதிகாரிகள் சந்தேகித்தால், அவரின் மின்னஞ்சல், வங்கி மற்றும் சமூக வலைதளக் கணக்குகளைப் பயன்படுத்தி உண்மையைப் பரிசோதிக்க முடியும் என கூறப்படுகிறது.