தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது தாவர பானங்களை தேநீர் என்று குறிப்பிடக் கூடாது என்று FSSAI உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஹெர்பல் டீ, ப்ளவர் டீ, மேங்கோ டீ, சாக்லேட் டீ என பல்வேறு வகைகளில் தேநீர் விற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தேநீர் பிரியர்களுக்கு சற்று கவலை அளிக்கும் என்பதில் மாற்றமில்லை