உயர் ரத்த அழுத்தம் இன்று பலருக்கும் பொதுவான பிரச்னையாக உள்ளது. தினசரி உணவில் உப்பு அளவை குறைத்து, காய்கறி, பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்ற உடற்பயிற்சிகளை தினமும் 30 நிமிடம் செய்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். போதிய தூக்கம், மனஅழுத்தத்தை குறைக்கும் பழக்கங்கள் அவசியம். உடல் எடையை சீராக வைத்துக் கொண்டு, மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை முறையாக எடுத்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.