தமிழகத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கம் நாளை (நவ.17) முதல் பணிகளை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) உரிய அவகாசம் வழங்க கோரியும், பணி நெருக்கடியை கண்டித்தும் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் எழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று மாலை மாவட்ட மற்றும் தலைநகரங்களில் நடைபெறுகிறது. அரசு விடுமுறை தினங்களில் பணி செய்ய நிர்ப்பந்திக்க கூடாது எனவும், ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் எனவும் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.