சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஊரவயல் பகுதியில் குஞ்சரம் என்பவரின் நிலத்தில் மகேந்திரா லாரியில் அரை யூனிட் மணல் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்ததாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, ஆறாவயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், 1 1/2 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டு, லாரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.