சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ளச் சந்தையில் சட்ட விரோதமாக மது. விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 82 மதுபாட்டில் மற்றும் ரூ.3,300 பறிமுதல் செய்து சின்ன கருப்பன், குமார், சரவணகுமார், பாலகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று(செப்.29) இரவு சுமார் 8 மணியளவில் விசாரணை மேற்கொண்டனர்.