சாலை மறியலில் ஈடுபட முயன்ற மக்கள்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வளநாடு சிவன் கோயில் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட மக்கள் திரண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி