அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் பழையனூர் கிராமத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, கீழ ராங்கியம் கிராமம் அருகே இன்று காலை கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 35 பயணிகளுக்கு லேசான மற்றும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்களில் 16 பேர் பலத்த காயமடைந்ததால், அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.