தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள எஸ்ஐஆர் படிவம் குறித்த வாக்காளர்களின் சந்தேகங்களைத் தீர்க்க உதவி மையங்கள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மானாமதுரை வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் கிருஷ்ணகுமார் எஸ்ஐஆர் படிவ உதவி மையத்தைத் திறந்து வைத்தார். வீடுதோறும் வழங்கப்படும் இந்தப் படிவங்களில் தற்போதைய புகைப்படத்தை இணைத்து பூர்த்தி செய்யலாம் என்றும், சிரமம் உள்ளவர்கள் உதவி மையத்தை அணுகலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வினோத்குமார் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் கலந்துகொண்டனர்.