சிவகங்கை சிபி காலனியைச் சேர்ந்த சமயமுத்து, தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் 20 மாதங்களுக்கு மாதம் ரூ. 1.25 லட்சம் செலுத்தும் திட்டத்தில் இணைந்தார். கொரோனா தொற்றால் தவணை செலுத்த முடியாத நிலையில், செலுத்திய பணத்தை நிர்வாகச் செலவு 5% கழித்து திரும்பக் கேட்டார். பணத்தை வழங்க இழுத்தடித்த நிறுவனத்திற்கு எதிராக சமயமுத்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், சமயமுத்து செலுத்திய தொகையில் 5% நிர்வாகச் செலவு கழித்து மீதித் தொகையான ரூ. 1,18,750-ஐ ஒரு மாதத்திற்குள் வழங்கவும், மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவிற்காக ரூ. 20,000 கூடுதலாக வழங்கவும் சிட்பண்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.