ஊழியருக்கு பலன்கள் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம், பெரிய கோட்டையில் உள்ள Q–711 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றி 2017ல் ஓய்வு பெற்ற கருப்பன் மகன் மாரிமுத்து, கடந்த 8 ஆண்டுகளாக தனக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் பிற பலன்கள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மதுரை தொழிலாளர் நீதிமன்றம் பணிக்கொடை வழங்க உத்தரவிட்டும் அது நிறைவேற்றப்படவில்லை என்றும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக பணத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you