சிவகங்கை: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரத்ததான முகாம்

53பார்த்தது
சிவகங்கை: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரத்ததான முகாம்
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட உதவி செயலாளர்கள் வழக்கறிஞர் பா. மருது, கோபால், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே. காமராஜ், மாவட்ட பொருளாளர் மணவாளன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் மாரி, மானாமதுரை ஒன்றிய செயலாளர் சங்கையா, சிவகங்கை நகர செயலாளர் சகாயம், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ராகவன், மாவட்ட தலைவர் வீரபத்திரன், ஏராளமான நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி