மதகுபட்டி அருகே நமசுபட்டியைச் சேர்ந்த கஸ்பார் என்பவர், உறவினர் திருமணத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.6,000 பணத்தையும், ஒரு பவுன் நகையையும் திருடிச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய கஸ்பார் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், மதகுபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.