சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே உள்ள பெரிய கண்மாய் பகுதியில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய மீன்பிடித் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலை முதலே கண்மாயில் இறங்கிய மக்கள், கைகளாலும் வலைகளாலும் மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர். ஸ்லீப்பி, கட்ட்லா, ராகு போன்ற பல்வேறு வகை மீன்கள் அதிக அளவில் கிடைத்ததால், இதில் கலந்து கொண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.