சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கடம்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுதா (36) என்ற கணவர் இழந்த பெண், தனது தாயாருக்கு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்கியிருந்தார். அப்போது, அவருடன் சேர்ந்து வாழ்ந்து பிரிந்ததாகக் கூறப்படும் சுபாஷ் என்பவர் மருத்துவமனைக்கு வந்து, வெளியே சென்று கத்தி வாங்கி வந்து சுதாவை குத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.