சிவகங்கை: கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் தகவல்

70பார்த்தது
சிவகங்கை: கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் தகவல்
தமிழக முதலமைச்சர் எதிர்வரும் 15.08.2025 அன்று சுதந்திர தின விழாவில், ஏதாவது ஒரு துறையில் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்புரிந்த மகளிருக்கான "கல்பனா சாவ்லா விருது 2025" மற்றும் ரூ. 5,00,000/- ரொக்கப்பரிசும் வழங்கப்படவுள்ளது. 

இவ்விருதினை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். இவ்விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக்குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் தமிழக அரசின் (https://awards.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, விண்ணப்பங்களை வருகின்ற 16.06.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.