சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுபாஷ் நகரில் உள்ள பள்ளியில் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் குழந்தைகள் நல மையத்தில் கழிவறை கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், தண்ணீர் வசதி இல்லாததால் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.