சிவகங்கை மாவட்டம் கட்டாணிபட்டி மலையடிவாரத்தில் உள்ள முனீஸ்வரன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 22 பேர் காயமடைந்தனர். கோயில் காளையை ஊர்வலமாக அழைத்து வந்து, பின்னர் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. காயமடைந்தவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.