சிவகங்கை அருகே சிறுவணிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 76 வயதான மீனாள், மதுரைக்கு செல்வதாக கூறி பேருந்தில் சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன மீனாளை தீவிரமாக தேடி வருகின்றனர்.