திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச
சேதுபதி, ஒவ்வொருவரும் தலைக்கணம் இன்றி செயல்பட வேண்டும் என்றும், அதிகார துஷ்பிரயோகம் செய்தால் மக்கள் அளித்த வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் அறிவுறுத்தினார். ஒரு வாக்கின் மகிமையை உலகம் உணர்ந்துள்ளது என்றும், வரும் காலங்களில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒரு வாக்கின் மகிமை பள்ளி பாடப் புத்தகங்களில் இடம்பெறும் என்றும் அவர் பேசினார்.