காரைக்குடி அருகே கே. கே. நகரில் புதிய வீடு கட்டி வரும் கருணாகரன் என்பவரின் வீட்டில் இருந்த மின் மோட்டார் வயர்களை 15 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் திருடியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கருணாகரன் அளித்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.